ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆர். வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார்.
செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் அமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது:
முன்னாள் சென்னை மாகாண முதல்வரும், முன்னாள் ஒடிஷா மாநில கவர்னருமான பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவப் படத்தை சட்டசபையில் திறக்க வேண்டும்.
தற்போது முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்.
நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்புகளைக் குறைக்க வேண்டும்.
ராஜபாளையம் மாஸ்டர் பிளான் - 2041 திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.
நிகழ்வின் நிறைவாக, சங்கச் செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
0
Leave a Reply