25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பட்டாசு விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில்  பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பட்டாசு விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (05.08.2025) தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் குழு ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு சம்பந்தமான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உடலுக்கோ, உயிர்க்கோ பாதுகாப்பற்ற சூழல் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் பட்டாசு உற்பத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், விபத்து இல்லாத சூழ்நிலையை பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளிடம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.அரசு அலுவலர்கள் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினரிடமிருந்து தடைவிலக்கு ஆணை பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டவுடன் உடனுக்குடன் பரிசீலித்து, மீண்டும் தொழிற்சாலைகளில் உற்பத்தி  பணிகள் தொடங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

மேலும், எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் அதிக பட்டாசு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாலும், அதனை தவிர்க்கும் பொருட்டு மிகுந்த பாதுகாப்புடனும் விதிமுறைகளை பின்பற்றியும், பட்டாசு உற்பத்திகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குநர்கள் திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.பி.ராஜ்குமார், வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர், தனி வட்டாட்சியர் (தீ.தொ.அ), அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News