இந்திய வீராங்கனைகள் ஆசிய குத்துச்சண்டையில் - தங்கம் வென்றனர்.!
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுண்டாரி என்க் அம்கலானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் ,54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் ஹூவாங்சியாயோவென்னை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்தியாவின் பிரியா 60 கிலோ எடைப்பிரிவில், 3-0 என்ற கோல் கணக்கில்வடகொரியாவின் வோன் அன் கியோங்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
உலக கோப்பை போட்டியில், 70 கிலோ எடைப்பிரிவில், தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பக்கித் செய்டிசைதோற்கடித்து தங்கப்பதக்கத்தைதனதாக்கினார்.
இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை பெண்கள் பிரிவில் வென்று ஆதிக்கம் செலுத்தியது.
0
Leave a Reply