தினை உப்புமா.
தேவையான பொருட்கள்:
தினை - 1 கப்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட், பீன்ஸ், பட்டாணி - 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப் (1 கப் தினைக்கு)
செய்முறை:
தினையை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
வெங்காயம், காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
3 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
ஊறவைத்த தினையைச் சேர்த்து, மூடி வைத்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும்.
இதனை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறலாம்.
0
Leave a Reply