முருகப்பெருமானுக்கு மொத்தம் மூன்று மயில்கள் இருக்கின்றன
முருகப்பெருமானுக்கு மொத்தம் மூன்று மயில்கள் இருக்கின்றன. முதலில் முருகன் உலகை வளம் வருவதற்காக பிரணவத்தை மயிலாக்கி, அதன் மீது ஏறி உலகை வளம் வந்ததால், அதுதான் முதல் மயில் மந்திர மயிலாகும்.
சூரனை சம்ஹாரம் செய்வதற்கு தேவேந்திரனை மயிலாக்கி அதன் மீது ஏறி பயணம் செய்ததால் அதன் பெயர் தேவ மைலாகும்.
சூரனை சம்ஹாரம் செய்த பிறகு அசுரன் சேவலாகவும் , மயிலாகவும் மாறி முருகனைத் தாங்கியதால் அதற்கு பெயர் அசுர மயில் ஆகும். எல்லாத்துக்கும் மேல் நம் மனதின் மீது முருகன் ஏறுவதற்கு, நம்மை மயிலாக மாற்றிக்கொண்டால், நம் மனதின் மீது முருகன் ஏறி அருள் புரிவார்.
0
Leave a Reply