நார்வே சர்வதேச செஸ்: கார்ல்செனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபாரம்!
நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்ல்செனை 46-வது நகர்த்தலில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். (கார்ல்செனை இவர் வீழ்த்துவது இது 2-வது முறை).
இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா, மொத்தமாக 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறினார். தோற்ற கார்ல்சென் கடைசி இடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான குகேஷ், பிரான்சின் அலிரெஜாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பின் வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஆர்மகேட்டன்' சுற்றில் குகேஷ் தோல்வியடைந்து 1 புள்ளியைப் பெற்றார்.
3-வது சுற்று முடிவில் பிரான்சின் அலிரெஜா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
0
Leave a Reply