உலகத் தாய்மொழி நாள் தினத்தை முன்னிட்டு உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி- 21 ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (20.02.2026) உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
0
Leave a Reply