திறந்தவெளி கிணறு புதர் மண்டிய சுகாதார வளாகம், சகதியான மெயின்ரோடு
வ.உ.சிமெயின் தெருவில் இருந்து ராக்காச்சி அம்மன் கடைசி பகுதி வரை சிறு குறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இங்கு அதிக வாகனங்கள் சென்று வரும்போது ரோட்டை ஒட்டி உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அச்சம் இருந்து வருகிறது.பல நேரங்களில் நாய், பூனை இதில் விழுந்து துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுவதால் தடுப்பு அமைக்க வேண்டும். குடியிருப்பு நடுவே செல்லும் வாறுகால் போதிய அகலமில்லாமல் மழைக்காலங்களில் கழிவுகள் தெருக்களில் வெளி யேறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை குவிவதை முறையாக அகற்றுவது இல்லை. குப்பை தேக்கம் ஏற்பட்டு அகற்ற வழி இன்றி எரித்து வருகின்றனர்.
எஸ்.ராமலிங்காபுரம் மெயின் ரோடு நுழைவு பகுதி தரைப்பாலம் நடுவே கம்பி பெயர்ந்து வாகனங்கள் நுழைவதற்கு திணறுகின்றன.மகளிருக்கான சுகாதார வளாகம் இல்லை. குடியிருப்புகளுக்கு' மின்விளக்கு, தெரு வசதி என அடிப்படை வசதிகளை எதிர் பார்த்துள்ளனர்.
0
Leave a Reply