பனீர் பட்டர் மசாலா
தேவையான பொருட்கள்
பனீர் ஊற வைக்க :
200கி பனீர்
1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
1ஸ்பூன் மிளகாய் தூள்
1ஸ்பூன் சீரகத் தூள்
1ஸ்பூன் கரம் மசாலா தூள்
1ஸ்பூன் தனியா தூள்
1/2ஸ்பூன் உப்பு
1ஸ்பூன் வெண்ணை பனீர் வறுப்பதற்கு
வதக்கி அரைக்க:
2ஸ்பூன் வெண்ணை,பெரிய வெங்காயம்-2,தக்காளி-4,
1துண்டு பட்டை,4கிராம்பு,2ஏலக்காய்,
4,5பல் பூண்டு ,1துண்டு இஞ்சி,6.7 முந்திரி
கிரேவி செய்வதற்கு:
2டேபிள் ஸ்பூன் வெண்ணை
2பிரிஞ்சி இலை, 1ஸ்பூன் மிளகாய் தூள்
1ஸ்பூன் தனியா தூள்
1ஸ்பூன் சீரகத் தூள்
1ஸ்பூன் கரம் மசாலா தூள்
1ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
சிறிதளவுபிரெஷ் கிரீம்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் ஒரு ஒரு பாத்திரத்தில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து அத்துடன் பொடிகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறவைத்த பன்னீரை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய் வதக்கியத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கினதும் அதனுடன் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் அதுவும் லேசாக வதங்கியதும் அதனுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.பனீர் வறுத்த கடாயிலேயே மீண்டும் வெண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை தாளித்து பொடிகளை சேர்த்து லேசாக வருத்தவுடன் நாம் வதக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்த்து கலக்கவும்.
வெங்காய தக்காளி விழுதுடன் சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு நன்றாக கொதித்ததும் அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.. பன்னீர் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் இறுதியாக கஸ்தூரி மேதியையும் பிரஸ் கிரீமையும் சேர்த்து இறக்கவும்.இப்போது சூடான சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.
0
Leave a Reply