25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆதார் சேவைக்கு அலையும் இராஜபாளயம் நகர மக்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதார் சேவைக்கு அலையும் இராஜபாளயம் நகர மக்கள்.

ஆதார் சேவைக்காக நிரந்தர சேர்க்கை, மையங்கள் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, அலுவலகங்களில் எல்காட் மூலம் சேவை வழங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் ஆதார் உடன் பான்கார்டு இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில் பான்கார்டு பெயர் ஒற்றுமைக்காக ,ஆதாரில் திருத்தம் உள்ளிட்ட பணிகள் அவசியமாகிறது. இது தவிர பள்ளி மாணவர்கள், மத்திய மாநில அரசுகளின் சலுகை திட்டங்களை பெறுவோர், அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ,இராஜபாளையத்தில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களில் தினமும் கூட்டம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கிராமப்பகுதியில் இருந்து திருத்தத்திற்காக வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வருவோருக்கு முறையாக டோக்கன் வழங்கி சேவைகள் வழங்குவது இல்லை. இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு வருகிறது. சேவை மையம் திறப்பு அடைக்கப்படும் நேரம் குறித்த குறிப்பு ,பொதுமக்களின் பார்வையில் படும்படியும். விடுமுறை காலங்களை முறையாக அறிவிப்பு எழுதி வைக்க வேண்டும். மாணவர்களுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அந்தந்த பகுதியில் சிறப்பு ஆதார் முகாம்கள் ஏற்படுத்தி கூட்டத்தை குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் போர்வையில் மண் கடத்தல்--

விவசாயிகள்,மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக என்ற பெயரில், மாவட்ட நிர்வாகம் கண்மாய் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்ததை, ரியல் எஸ்டேட் துறையினரும், செங்கல் சூளை அதிபர்கள் மும்முரமாக பயன்படுத்தி வருகின்றனர். சுற்று வட்டார கண்மாய்களில் மண் அள்ளுவதற்கான விதிமுறைகளை மீறி கண்மாய் கரைகளை உடைத்து பாதை ஏற்படுத்தி கரைகளை ஒட்டியும், மடைகளில் தண்ணீர் வெளியேற வழி இன்றியும் அதிக ஆழத்திற்கு மண் அள்ளுகின்றனர். இயந்திரம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது.விவசாயத்திற்கு ஆதாரமான கண்மாயின் உள்பகுதியில் சிறு சிறு தெப்பங்களாக மாற்றும், இவர்களின் செயல் எல்லை மீறி போவது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது? என்ற விரக்தியில் விவசாய சங்கங்களும் தவித்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News