பெப்சி நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் ‘பெப்சி’யில் ஒளிப்பதிவாளர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள் உள்ளிட்ட 23 சங்கங்கள் உள்ளன. இந்த அமைப்புக்கான 2026-ம் ஆண்டின் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக ஆர்.கே. செல்வமணி ஐந்தாவது முறையாகப் பதவியேற்றார். அவர் கூறுகையில், “நஷ்டத்தில் இயங்கும் தமிழ் திரைத்துறையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல முதல்வர் விஜய் உதவ வேண்டும். தமிழக அரசு சார்பில் தமிழ் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” என்றார்
0
Leave a Reply