'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருதுஇளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.
பீஹாரை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 14. இவர், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்து, சதங்களாக விளாசுகிறார். இந்த ஆண்டு பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 35 பந்தில் சதம் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் (4 நாள்) 58 பந்தில் சதம் அடித்தார். ஆசிய கோப்பை கத்தாரில் நடந்த 'ரைசிங் ஸ்டார்' " தொடரில் இந்திய 'ஏ' அணிக்காக 42 பந்தில் 144 ரன் எடுத்தார். சையது முஷ்டாக் அலி உள்ளூர் 'டி-20' தொடரில் 61 பந்தில் 108 ரன் எடுத்தார்.
84 பந்தில் 190 ரன் விளாசினார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இளம்நட்சத்திரங்களுக்கான ((5-18 வயது ) 'பிரதமரின் பால புரஸ்கார் விருதுக்கு' தேர்வு செய்யப் பட்டார்.இவ் விருது கலை, கலாசாரம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப் படுகிறது.டில்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதி பதி திரவுபதி முர்மு, விருதினை சூர்யவன்ஷிக்கு வழங்கினார்.
0
Leave a Reply