25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம்   நகரின் நீரின் வேதித்தின்மை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் நகரின் நீரின் வேதித்தின்மை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

இராஜபாளையம் சேத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர் ஆதார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பு உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வருகின்றன. கிணறு ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தென்னை, வாழை காய்கறி பயிர்களும், நீர் குறைந்த பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஆழ்துளை கிணற்று நீர் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

முன்பு கண்மாய் பாசன நீர் மூலம் பெறும் விவசாயம் நல்ல மகசூலை பெற்று வந்த நிலையில் நீரின் தன்மை உவர்ப்பாக மாறியதுடன் ஆழ்துளை கிணற்று நீரின் வேதித்தன்மை, அதிகரித்துள்ளதால் சாகுபடி குறைவும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கு காரணம் நகரின் சாக்கடை, கழிவு நீர் தேங்கும் பகுதியாக கண்மாயை மாற்றியதே ஆகும். பல்வேறு பகுதிகளும் இதே நிலை காணப்படுவதால் நீர் நிலைகளை ஒட்டிய விவசாயமும் பாதிப்பு ஏற்படுகிறது. மண்ணின் தன்மையை ஆய்வு செய்து பிரச்சனைகளை போக்க அரசு துறைகள் முன் வரவேண்டும் என்ற விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News