ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
சந்தனமாரியம்மன் கோயில் விழா கமிட்டியினர் ஏற்பாட்டில் ,ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில்கணபதி நவக்கிரஹ ஹோமம், மாலையில் கும்ப பூஜை முதல் கால யாகசாலை, மூன்றாம் பூஜைகள், இரண்டாம், நாள் யாககால பூஜைகள், பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 6:00 மணி சித்திவிநாயகர், சந்தன மாரியம்மன், முனீஸ்வரர், வைரவர் சுவாமி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
0
Leave a Reply