ஓரியூரில் உள்ள சேயுமானார் கோவில்.
மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் தன் அடியவர்களுக்காக 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். அதில் விருத்த குமார பாலரான திருவிளையாடல் நிகழ்த்தியது ஓரியூரில் உள்ள சேயுமானார் என்னும் இத்தலத்தில் தான்.
விருபாட்சர், சுபவிரதை தம்பதிக்கு கவுரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சிவபக்தையான கவுரி திருமண வயதை அடைந்தாள். வைணவ இளைஞன் ஒருவனுக்கு மகளை மணம் செய்து வைத்தார் விருபாட்சர். அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவளை புறக்கணித்தனர்.
இளம் வயதிலேயே கவுரி முக்தியை வேண்டி சிவனை சரணடைந்தாள். ஒருநாள் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து விட்டு வெளியே சென்றனர். அந்த நேரத்தில் அடியவர் வடிவில் வந்த சிவன் அவளை விடுவித்தார். அடியவர் வடிவில் நின்ற சிவனுக்கு வயிறார உணவு அளித்தாள் கவுரி: குழந்தையாக மாறிய சிவன் அவளுக்கு முக்தி அளித்தார்.
குழந்தை வடிவில் காட்சியளித்த சிவனே இக்கோயிலில் மூலவராக இருக்கிறார்.1300 ஆண்டுக்கு முந்திய தலமான இது இயற்கை சீற்றத்தால் சிதிலமானது. திருப்பணி நடத்த முயற்சித்த போது அந்நிய மதத்தினரின் கெடுபிடியால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் திருப்பணியில் ஈடுபட்டு கோயிலை முழுமையாக்கினார் சிவபக்தையானபெங்களூரு அறம் வளர் நாயகி
'ஓரியூரில் உகந்து இனிதருளிப் பாரிகும் பாலகன் ஆகிய பரிசும்' என இத்தலத்தில் சிவபெருமான் விருப்பமுடன் குடியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகர்.
சுவாமியின் பெயர்சேயுமானார், அம்பிகையின்பெயர்மட்டுவார்குழலியம்மை.பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நால்வர், பிரம்மா, *துர்கை சன்னதிகள் உள்ளன.இங்கு வழிபட்டால் இளமையுடன் வாழலாம்.குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
0
Leave a Reply