சிறு தானிய இட்லி.
தேவையான பொருட்கள் -
1 கப்வரகு அரிசி,
1/2 கப்சாமை அரிசி,
1 கப்குதிரை வாலி அரிசி,
1/2 கப்தினை அரிசி,
1 கப்இட்லி அரிசி,
1 கப்உளுத்தம்பருப்பு,
1ஸ்பூன்வெந்தயம்,
தேவையான அளவு உப்பு,
தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை:
வரகு,தினை, சாமை, குதிரை வாலி அரிசி , இவைகளை நன்றாக கழுவி சுத்தம்செய்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுத்தம்பருப்புபை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன் வெந்தயம் சேர்த்து நன்றாக ஊற விடவும்.
நன்றாக ஊறிய பின் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்து எட்டு மணி நேரம்புளிக்க வைத்து, பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
எப்பொழுதும் நாம் சாப்பிடும் இட்லி போல் இருக்கும். தோசையும் செய்யமுடியும். இந்த மாவில் சுவையாக இருக்கும். இட்லி பஞ்சு போல் இருக்கும்.நான்குக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து அரைத்து எடுக்கவும்.
உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானியஇட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும்.
0
Leave a Reply