1.1.2026-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
புதிய வாக்காளர் அடையாள அட்டை/ இறந்த நபரின் பெயரை நீக்கம்/திருத்தம்/பகுதி மாற்றம் செய்தல்/ வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்தல் முறையே படிவம் 6, படிவம் 7 மற்றும் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்குவதற்கு அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் 10.12.2025 புதன் மற்றும் 11.12.2025 வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேற்படி முகாமினை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply