வெள்ளி பதக்கத்துடன் திரும்பிய ஸ்ரீகாந்த்.
அமெரிக்காவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ். ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் ரன்னர்-அப் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள 33 வயதான ஸ்ரீகாந்த், சீன தைபேயின் சு லியாங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 15-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டில் 21-16 என வென்று சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 9-21 என போராடி தோல்வியடைந்தார்.
ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 15-21, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் தோற்ற ஸ்ரீகாந்த், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply