'சூப்பர்-8' டி-20,'உலக கோப்பை போட்டி .
வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் இந்தியாவின் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று மோதின.
'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா,'பீல்டிங்' தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 254/6 ரன் குவித்தது,
ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 147 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள், அதிக ரன் ரேட்டுடன் பட்டியலில் 'டாப்-2' ஆக உள்ளன.
'டி-20' உலக கோப்பை 'சூப்பர் -8' போட்டியில் ஆமதாபாத்தில்நேற்று முன் தினம் தென் ஆப்ரிக்காவிடம் (20 ஓவர், 187/7), இந்திய அணி (18.5 ஓவர், 111) 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'டி-20'உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்று, பிரிவில் இலங்கை பல்லேகெலே, இல் இன்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி, ஏற்கனவே அதிக ரன் ரேட்டில் (2.550) உள்ளது. இன்று வென்றால், 4 புள்ளியுடன் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
0
Leave a Reply