சாத்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் (28.01.2026), மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு, இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வரும் நிகழ்வினை முன்னிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சாத்தூர் வட்டம், வெங்கடாசலபுரத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று சந்தித்து, உரிய பயிற்சி வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கான எதிர்காலத்திட்டங்களை செயல்படுத்தவும் தொடங்கப்பட்ட உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் படிவங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெங்கடாசலபுரத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, சாத்தூர் நகராட்சி, தில்லை நகரில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, வாக்காளர் வரைவுப் பட்டியலில் 18-வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதமாக, படிவம்-6 வழங்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply