ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் உள்ள ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்(18.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் கிராமத்தில் அர்ஜீனா நதியின் குறுக்கே 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள அணை ஆனைக்குட்டம் அணையாகும். இந்த அணையானது 591 ச.கி.மீ நீர்வரத்துப்பகுதி உடனும், 2,940 மீ நீளத்தில் 9 நீர் வெளியேற்றும் மதகுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு பரப்பானது 795.26 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த அணையில் 125.752 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் அதிகபட்சமாக 1,708 க.மீ நீரினை வெளியேற்ற இயலும்.
இந்த அணையின் கீழ் பகுதியில் 5.1 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கால்வாயின் வாயிலாக சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த 771.77 ஹெக்டர் விவசாய நிலங்களும், விருதுநகர் வட்டம், முத்துலிங்காபுரத்தில் 356.48 ஹெக்டர் நிலங்களும், வாடி கிராமத்தில் 45.82 ஹெக்டர் நிலங்கள் என 1174.07 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் முதல் போகத்திற்கு 1,500 ஏக்கர் நிலமும், இரண்டாம் போகத்தில் 3,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.இந்த அணையில் பராமரிக்கப்படும் மதகுகள், நீர்த்தேக்கப்பகுதிகள், பிரதான கால்வாய் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருமதி மலர்விழி, (வைப்பார் வடி நில கோட்டம்) உதவி செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன், உதவி பொறியாளர் திரு.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply