மாம்பூக்கள் மா மரங்களில் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்என விவசாயிகள் எதிர்பார்ப்பு .
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி ஸ்ரீவில்லிபுத்துார் வத்திராயிருப்பு மாமரங்களில் பரவலாக மாம்பூக்கள் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் பூத்த பூக்கள் பாதிப்பின்றி விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, அல்போன்சா, சப்போட்டா போன்ற மா சாகுபடி ஸ்ரீவில்லிபுத்துார்தாலுகாவில் மம்சாபுரம், செண்பகத்தோப்பு, பந்தபாறை, திருவண்ணாமலை பகுதிகளிலும், வத்திராயிருப்பில் புதுப்பட்டி, கான்சாபுரம், அத்திகோயில், பிளவக்கல் அணை, தாணிப்பாறை பகுதிகளில் மா சாகுபடி ஏராளமான ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் அதிகளவில் நடந்து வருகிறது.
அதிக குளிர் மற்றும் மழை, தேன் நோய் பாதிப்பினால் கடந்த ஆண்டு மா விளைச்சல் சிறப்பாக இல்லாமல் விவசாயிகள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்கழி கடைசியில் துவங்கி தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளது.இன்னும் இரு வாரங்களில் காய் பிடித்து மே மாதம் முதல் மாம்பழ சீசன் துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
0
Leave a Reply