வெடி விபத்தில் காயமடைந்து,விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் வெடி பொருட்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து, விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை ( 11.06.2025) நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ .ப. ஜெயசீலன் , I A S, அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
0
Leave a Reply