அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்கள் .
நன்றாக வளர்ந்த ஒரு மரம். ஒரு நாளைக்கு 2 முதல் 10 மனிதர்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என கண்டறியப்பட்டு உள்ளது. . ஒரு முதிர்ந்த மரம் ஓராண்டுக்கு ஏறக்குறைய 260 பவுண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.
பொதுவாக, மரங்கள் கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி ஆக்சிஜன் மற்றும் குளுக்கோசை உற்பத்தி செய்கின்றன.
மரங்கள் பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும். அதே வேளையில், இரவு நேரத்தில் சுவாசிப்பதற்காக அதில் சிறிதளவு பயன்படுத்துகின்றன. மரங்களை பொறுத்தவரை, அகன்ற இலை கொண்ட மரங்கள், அவற்றின் அதிக இலை மேற்பரப்பு காரணமாக சிறிய இலைகளை கொண்ட ஊசியிலை மரங்களை விட அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன .
இவற்றை எல்லாம்விட, ஒரு இடத்தில் மரங்கள் அதிக அளவில் இருந்தால் அந்த இடத்தின் வெப்பநிலை சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து குளிர்ச்சியாக காணப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு புள்ளி விவரப்படி, ஒரு மனிதனுக்கு 699 மரங்கள் என்ற விகிதம் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதுவே ஆஸ்திரேலியா 3,266, பிரான்சு 203, எத்தியோப்பியா 143, கிரீன்லாந்து 4,964 என்ற அளவில் காணப்படுகிறது.
இந்தியாவில் ஒரு நபருக்கான மரங்களின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் குறைய வேண்டும் என்றால், மேற்கண்ட நாடுகளை போல மரங்களை ஏராளமாக வளர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
0
Leave a Reply