உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர்திவ்யா,அர்ஜுன், வைஷாலி வெற்றி.
உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று துவங்கி,.முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. ஓபன் பிரிவில் இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, அபிமன்யு, இனியன், பிரனேஷ், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர்.
முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் மக்சிமை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா, 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன், பிரான்சின் மார்கோ மடேரியாவை சந்தித்து 53 நகர்த்தலில் வென்றார்.
கனடாவில் ரோட்ரிகு ,உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், மோதிய போட்டி 'டிரா' ஆனது.
3 வெற்றி பெற்ற அர்ஜுன் (3.0), கார்ல்சன் (3.0) முதல் 3 சுற்று முடிவில் முதலிடத்தில் இருந்தனர்.
இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, சாவித்ரி உட்பட 141 பேர் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் வைஷாலி, ரஷ்யாவின் அலியாக்சாண்ட்ராவை 43 வது நகர்த்தலில் வென்றார். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் குயான்யுனை வென்றார்.
0
Leave a Reply