துபாயில் ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில் அபிஷேக் சர்மா 'நம்பர்-2'
துபாயில் சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 829 புள்ளிகளுடன் 40வது இடத்தில் இருந்து முதன் முறையாக 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது 'டி-20' போட்டியில் 54 பந்தில் சதம் (135 ரன், 13 சிக்சர்) விளாசிய இவர், 'டி-20' போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரரானார். ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் - இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா - (251) முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
0
Leave a Reply