ராஜபாளையத்தில் காலாவதியான பொருட்கள் ,கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு .
ராஜபாளையத்தில் காலாவதியான பொருட்கள், கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது உணவுப் பொருட்களின் பெயர், விலாசம், தயாரிப்பு காலாவதி தேதி உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் தெரியும் வகையில் அச்சிட வேண்டும் என்பது அடிப்படை விதி.இந்நிலையில் வளர்ந்து வரும் ராஜபாளையம் நகர் பகுதியில் பெரும்பாலான உணவகங்கள், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றில் கலப்பட உணவு பொருட் கள், அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
ஓட்டல்களில் விற்பனையாகாத உணவுகளை பிரிட்ஜ்களில் வைத்து விற்பது, பாஸ்ட் புட் கடைகளில் எந்தவித பாதுகாப்பும் சுகாதாரமும் இன்றி உணவு தயாரிப்பு போன்றவை மக்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply