மலேசியாவில் 19 வயதுகுட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி 'டி-20' உலக கோப்பையில் இந்தியா மீண்டும் சாம்பியன் .
மலேசியாவில் 19 வயதுகுட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி -20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. நேற்று, கோலாலம்பூ ரில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகி (44* ரன், 3 விக்கெட்), தொடர் நாயகி (309 ரன், 7 விக்கெட்) விருதுகளை இந்தியாவின் திரிஷா வென்றார்.
டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு, பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது பெண்கள் சக்தி குறித்து மிகுந்த பெருமை கொள்கிறோம். 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது, என பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை வெளியிட்டார்.
0
Leave a Reply