திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.
இன்று இரவு 7:00 மணிக்கு ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.
இக்கோயிலில் மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம், எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடந்தது.
ஒன்பதாம் திருநாளான இன்று காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டமும், இரவு 7:00 மணிக்குஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்துநேற்று மாலை பட்டு, மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.. பின்னர் மாடவீதிகள் சுற்றி வந்து, ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.
இன்று இரவு நடக்கும் திருமணத்தின் போது ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படுகிறது.
0
Leave a Reply