நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை. ராஜபாளையம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
15 ஆயிரம் ஏக்கரில் ராஜபாளையம் ,தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவிவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்த கனமழையால் சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் நன்கு விளைந்தபாதித்த நெற்பயிர்கள் , விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
விவசாயிகள்அறுவடைசெய்யப்படும்நெல்மணிகளைஉலரவைக்க, உலர்களம்அமைக்கவும்நெல்மணிகளை பாதுகாக்கவும், கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நெல்கொள்முதல்நிலையம் தொடங்கினால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவதுடன் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க ,தற்போது அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450 வரை நிர்ணயம் செய்துள்ளது. தனியாரிடம் நெல் மூடைகளை விற்பனை செய்தால்குவிண்டாலுக்கு ரூ.1,800 நிர்ணயம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்குஇழப்பீடு ஏற்படும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் நெல்கொள்முதல் நிலையம் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply