17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்! மதுரையில் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப். 17) கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், தங்கள் வீட்டு விழாவாகக் கருதி லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரைக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை நேரில் தரிசிக்க கோயில் மேல்தளத்தில் 9,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்குப் பிறகு பொதுத் தரிசனத்திற்காக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சிறப்புமிக்க கும்பாபிஷேகத்தை காண மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
0
Leave a Reply