கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம்.
கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட,ராஜபாளையத்தில் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர் நடவடிக்கைஎடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் சாலைகளில் கண் கூசும் ஒளியை அனைத்து வாகனங்களிலும் பொருத்தி செல்வ தால் எதிர்வரும் வாகனங்கள் அதிக வெளிச்சம் காரணமாக மோதி விபத்திற்கு உள்ளாவது அதிகரித்துள்ளது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் விஜயகாந்த், அருள் சேகர் தலைமையிலான போலீசார் காந்தி சிலை ரவுண்டானா பகுதிகளில் சோதனை செய்து,.ஆட்டோ, வேன் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான சிகப்பு, நீல நிற விளக்குகள்பொருத்திய வாகனங்களுக்கு மீறல் காரணமாக வழக்குப்பதிந்து ரூ.5 ஆயிரம்அபராதம் விதித்துள்ளனர்.
வாகன ஓட்டுநர்கள் முகப்பில் பொருத்தப்பட் டுள்ள கண் கூசும் வண்ண விளக்குகளை தாமாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
0
Leave a Reply