'பார்ட்டிக்கிள் போர்டு' எனப்படும் மரத் துகள் பலகை சென்னையில் நவீன ஆலை.
மரப் பலகைத் தொழிலில் ஈடுபட்டு வரும் செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் (இந்தியா) நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 'பார்ட்டிக்கிள் போர்டு' எனப்படும் மரத் துகள் பலகை தயாரிப்புக்கான நாட்டின் மிகப்பெரிய உற் பத்தி ஆலையை செயல் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.அதிநவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப் பட்டுள்ள இந்த ஆலை, ஆண்டுக்கு 800 கன மீட்டர் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இதன் வாயிலாக, மரத் துகள் பலகை உற்பத்தியில், நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் உருவெடுத்துள்ளது.
0
Leave a Reply