25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விமான டிக்கெட் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விமான டிக்கெட் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணம்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை  மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், விமானங்களுக்குபயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எரிபொருள் விலை, உயர்ந்துள்ளது. 

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள், கடந்த மாதத்தில்சர்வதேச விமானங்களின் டிக்கெட் விலையை உயர்த்தின.

 உள்ளூர் நகரங்கள் இடையிலான விமானங்களில், டிக்கெட் கட்ட ணம்உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத், டில்லி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. 

போதுமான பயணியர்  இல்லாமல் ,தமிழகத்திற்குள் சில வழித்தடங்களில்,  விமானங்கள் இயக்கப்படுவதால்,. அவற்றுக்கு  ஈடு கொடுக்கும் வகையில் கட்டண உயர்வுஅமல்படுத்தப்பட்டு ,டிக்கெட் கட்டண விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுஎன விமான நிறுவன வட்டாரங்கள் கூறியது.

சில மாதங்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியரும், விமான நிலையங்களில் 'போர்டிங் பாஸ்' வாங்கும் முன், கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News