அல்சைமர் . ( மறதி நோய் )
அல்ஸைமர் நோயின் முதல் அறிகுறியே மறதியில்தான் ஆரம்பமாகிறது. இவர்களுக்கு மறதி மற்றும் கவனக்குறைவால் எதையும் மனதில் பதிய வைக்க முடிவதில்லை. இவர்களின் மறதியில் ஒரு தனித்தன்மையும் உண்டு. முக்கியமாக, அண்மைக்கால நினைவு பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால் அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மைக்கால நினைவுகள் அற்றுப்போய் விடுகின்றன.
நடை, உடை, பாவனைகளில் மாற்றம் தெரியும். சுத்தமாகப் பளிச்சென உடை உடுத்துபவர், கசங்கிய சட்டையை
அணிவார். சட்டை பொத்தானை மாற்றிப் போட்டுக் கொள்வார். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மேற்கொண்ட மறதி சார்ந்த தொல்லைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். இதுவே மறதி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.
0
Leave a Reply