தமிழகத்தின் அஸ்வத் புதிய கிராண்ட்மாஸ்டர்.
புனேயில் நடைபெற்ற சர்வதேச 'ரவுண்ட் ராபின்' செஸ் தொடரில் தமிழக வீரர் அஸ்வத் சிறப்பாக விளையாடி புதிய கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றார்.
9 சுற்றுகளில் 6 வெற்றி, 2 டிரா பெற்று மொத்தம் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த அவர், கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான மூன்றாவது நார்மை நிறைவு செய்தார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த அஸ்வத் தற்போது 2517 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியாவின் புதிய கிராண்ட்மாஸ்டராக உயர்ந்துள்ளார்.
0
Leave a Reply