விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றம் புகார்களை வாட்ஸ் அப் எண்ணிற்கு 9445477016 தெரிவிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின், கீழ் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ / மாணவியர்கள் விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க 9445477016 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மேற்படி 9445477016 எனற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply