2025-2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றவிக்கப்பட்டது.அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
2025-2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்;,
மேலும் tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள website) https://cms.tn.gob.in/cms_migrated/document/forms/best/writers/award_application_form/2025-2026.pdf என்ற Link அல்லது இணைப்பில் காணும் QR Code-ia ஸ்கேன் செய்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்;,
விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பின் இரு நகல்களை வன்நகலாகவும் (Hard Copy) டிஜிட்டல் (Digital) முறையிலும், உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 31.08.2026 -க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர், மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply