ஆக. 16-ல் பாரதிராஜா, பாக்யராஜுக்கு நினைவு விழா.
.மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு தமிழ் திரையுலகின் சார்பில் 'ராஜகோபுரங்கள் நினைவு உற்ஸவம்' என்ற பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் இந்த விழாவை நடத்துகின்றன. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியிலும், பாக்யராஜின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலும் மணிமண்டபம் அமைத்து, மார்பளவு சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
0
Leave a Reply