25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சூலை 18   தமிழ்நாடுநாள்  விழாவை   முன்னிட்டு  பள்ளி  மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்  நடைபெற உள்ளது  என  மாவட்ட  ஆட்சித் தலைவர்   அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூலை 18   தமிழ்நாடுநாள் விழாவை  முன்னிட்டு  பள்ளி  மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது  என  மாவட்ட  ஆட்சித் தலைவர்   அவர்கள் தகவல்.

தமிழ்  வளர்ச்சித்  துறையால் “தனித்துவத்  தமிழ்நாடு  எனப்பெயர்  சூட்டப்பட்ட 18.07.1967ஆம்நாளினை பெருமைப்படுத்திடும் வகையில்  ஆண்டுதோறும்  சூலை 18ஆம் நாள்  “தமிழ்நாடுநாள்  விழாவாக”  மிகச்  சிறப்பாகக்  கொண்டாடப்பட்டு  வருகிறது.

 தமிழ்நாடுநாளை  நினைவுகூரும்  வகையில்  விருதுநகர்  மாவட்டத்தில்  உள்ள அனைத்து  வகையான  பள்ளிகளிலும்  6ஆம் வகுப்பு முதல் 12ஆம்  வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்குக்  கட்டுரை  மற்றும்  பேச்சுப்போட்டிகள் 14.07.2026 அன்று   விருதுநகர் கே.வி.எஸ்.  ஆண்கள்  நடுநிலைப்பள்ளியில்  (விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில்) நடத்தப்பெறும். 

 பள்ளி  மாணவர்களுக்கானக்  கட்டுரை   பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்று வெற்றிபெறும்  மாணவர்களுக்கு  மாவட்ட  அளவில்  முதல் பரிசாக ரூ.10,000 -மும்  இரண்டாம் பரிசாக  ரூ.7000 -மும்  மூன்றாம் பரிசாக ரூ.5000 -மும்  மற்றும் பாராட்டுச்சான்றிதழ்  வழங்கப்பெறும்.

  தமிழ்நாடு நாள்  விழாவை  முன்னிட்டு  மாவட்ட   அளவில்  வெற்றி  பெற்று   மாநில  அளவிலான  கட்டுரை   பேச்சுப்போட்டியில்   வெற்றி பெறும்   மாணவர்களுக்கு  முதல் பரிசாக ரூ.50,000 -மும்,  இரண்டாம் பரிசாக ரூ.30,000 -மும்,  மூன்றாம் பரிசாக ரூ.20,000 -மும், மற்றும்  பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெறும். முதன்மைக்  கல்வி  அலுவலரால்  அளிக்கப்பெறும்  பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள்  மட்டுமே  போட்டிகளுக்கு  அனுமதிக்கப்படுவார்கள்.  

             கட்டுரைப்  போட்டி   தமிழ்நாடு  நாள்  கருவானது  முதல்  உருவானது  வரை  என்ற   தலைப்பிலும் ,    பேச்சுப் போட்டி   1.நான் விரும்பும்  தமிழ்நாடு   2.அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய   நவீன  தமிழ்நாடு  3.இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு  4.கல்வியில் சிறந்த தமிழ்நாடு  5. வீரம் செறிந்த  தமிழ்நாடு  என்ற  ஐந்து தலைப்புகளில்  போட்டி நாளன்று  மாணவர்கள்  குலுக்கல்  முறையில்  தேர்ந்தெடுக்கும்  ஏதேனும்   ஒரு   தலைப்பின்கீழ்   பேசவேண்டும்.  மேலும் போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு  தமிழ்வளர்ச்சி   உதவி இயக்குநர்  மாவட்டஆட்சியர்  அலுவலக வளாகம்  விருதுநகர் என்ற  முகவரியிலோ  அல்லது  செல்பேசி  8778878443 / 8608953287 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

 விருதுநகர்  மாவட்டத்தில்  உள்ள  பள்ளிகளில்  பயிலும்   மாணவ  மாணவிகள் இப்போட்டிகளில்  பங்கேற்று  பயன்பெறுமாறு   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., தெரிவித்துள்ளார்.                           

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News