குகேஷ், பிரக்ஞானந்தா நார்வே செஸ் முதல் சுற்றில் வெற்றி .
ஆஸ்லோ நகரில் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை வெற்றி பெறுவர்.
உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் ஆண்கள் பிரிவில் முதல் சுற்றில் மோதினார். குகேஷ் கிட்டத்தட்ட 5 மணிநேர போராட்டதுக்கு பிறகு 144-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதையடுத்து வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க ஆர்மகேட்டன் முறை கடைபிடிக்கப்பட்டு, ஆடிய குகேஷ் 22-வது நகர்த்தலில் கீமரை தோற்கடித்தார். அவருக்கு 12 புள்ளியும், கீமருக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது.
தமிழகத்தின் பிரக்ஞானந்தா, இதேபோல் ஆர்மகேட்டன் முறையில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை 43-வது நகர்த்தலில் வென்றார்.
0
Leave a Reply