கோடை வந்தவுடன் முதியோர்களைத் தாக்க முதலில் வருவது heat Stroke.
உடல் வறட்சி, அரிப்பு, வேனல் கட்டி, அக்கி, நீரிழப்பு, மயக்கம், நீர்ச்சுருக்கு. இவை எல்லாவற்றிலும் இருந்து மொத்தமாக நம்மைக் காப்பாற்றஒரே ஒரு மருந்து இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? வாங்க... ஒட்டுமொத்தநோய்களுக்கும் கீழ்க்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இந்தக்கோடை முழுவதும் சாப்பிட்டால் சகலரோக நிவாரணியாகச் செயல்படும்!
1. குக்கில் பற்பம் அல்லது குக்கில் பற்ப மாத்திரையைப் பாலுடன் தினமும் ஒருவேளை எடுக்க நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், தோல் அரிப்பு வெப்ப அலை தாக்கம் இவற்றிலிருந்து தப்பிக்கலாம் (மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கவும்).
2. பாதாம் பிசினைப் பொடித்து நீரில் ஊறவிட்டுப் பாலுடனோ,பழச்சாறுகளுடனோ சேர்த்துக் குடிக்க, மேற்சொன்ன கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.
3. சப்ஜா விதைகளை நீரிலிட்டு ஊறவைத்துப் பழச்சாறுகளுடன் குடிக்கலாம். இதனால் உடல் உஷ்ணம் தணியும்.
4. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நன்னாரி மணப்பாகு தினம் இருவேளை நீர்விட்டுக் குடிக்க மேற்சொன்ன நோய்கள் தீரும்.
5. மேலும் வெண்பூசணி லேகியம், சதாவரிலேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், நன்னாரி லேகியம், மனோரஞ்சித லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கலாம்.
6. வாழைத்தண்டு, முள்ளங்கி, பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களைத் தினமும் சாப்பிடலாம்.
7. பானகம், பழச்சாறுகள் இளநீர், மோர், நிசி நீர் எனப்படும் பழைய சோற்றுநீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் புரோபயாடிக் உள்ளதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
0
Leave a Reply