25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


கோடை வந்தவுடன் முதியோர்களைத் தாக்க முதலில் வருவது heat Stroke.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை வந்தவுடன் முதியோர்களைத் தாக்க முதலில் வருவது heat Stroke.

உடல் வறட்சி, அரிப்பு, வேனல் கட்டி, அக்கி, நீரிழப்பு, மயக்கம், நீர்ச்சுருக்கு. இவை எல்லாவற்றிலும் இருந்து மொத்தமாக நம்மைக் காப்பாற்றஒரே ஒரு மருந்து இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? வாங்க... ஒட்டுமொத்தநோய்களுக்கும் கீழ்க்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இந்தக்கோடை முழுவதும் சாப்பிட்டால் சகலரோக நிவாரணியாகச் செயல்படும்!

 

1. குக்கில் பற்பம் அல்லது குக்கில் பற்ப மாத்திரையைப் பாலுடன் தினமும் ஒருவேளை எடுக்க நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், தோல் அரிப்பு வெப்ப அலை தாக்கம் இவற்றிலிருந்து தப்பிக்கலாம் (மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கவும்).

 

2. பாதாம் பிசினைப் பொடித்து நீரில் ஊறவிட்டுப் பாலுடனோ,பழச்சாறுகளுடனோ சேர்த்துக் குடிக்க, மேற்சொன்ன கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

 

3. சப்ஜா விதைகளை நீரிலிட்டு ஊறவைத்துப் பழச்சாறுகளுடன் குடிக்கலாம். இதனால் உடல் உஷ்ணம் தணியும்.

 

4. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நன்னாரி மணப்பாகு தினம் இருவேளை நீர்விட்டுக் குடிக்க மேற்சொன்ன நோய்கள் தீரும்.

 

5. மேலும் வெண்பூசணி லேகியம், சதாவரிலேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், நன்னாரி லேகியம், மனோரஞ்சித லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கலாம்.

 

6. வாழைத்தண்டு, முள்ளங்கி, பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களைத் தினமும் சாப்பிடலாம்.

 

7. பானகம், பழச்சாறுகள் இளநீர், மோர், நிசி நீர் எனப்படும் பழைய சோற்றுநீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் புரோபயாடிக் உள்ளதால்  உடல் ஆரோக்கியம் மேம்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *