25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


மாடித் தோட்டத்தில் பிரம்மகமலம்பூ செடி வளர்ப்பது எப்படி?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாடித் தோட்டத்தில் பிரம்மகமலம்பூ செடி வளர்ப்பது எப்படி?

பிரம்ம கமலம் செடி சுமார்5 முதல்10 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய செடியாகும். இது ஒருவகையான ஹெர்மாஃப்ரோடைட் மூலிகை செடி ஆகும். இது அதிக விலை உயர்ந்த செடியாகும். பிரம்ம கமலம் செடி விஷ்ணு மற்றும் சிவனுக்கு சாற்றப்படும் ஆன்மிக மலராகும். இந்த செடி இரவில் பூத்து  காலையில் உதிரும் தன்மையை உடையது.

 இந்த வகை செடிக்கு அறிவியலில் சௌசுரிய ஒப்வல்லட்டா என்ற மற்றோரு பெயரும் உண்டு. இது அதிகமாக இந்திய, பூட்டான்,நேபாளம், பாகிஸ்தான்,சீனா மற்றும் இமயமலை பகுதிகளில் காணப்படும். இந்த பூவில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. பிரம்ம கமலம் ஒரு புனித மலராக கருதப்படுகிறது. 

மாடித்தோட்டம் பிரம்ம கமலம் சாகுபடி செய்ய செம்மண் ஒரு பங்கு தேவை. நீங்கள் அதை ஒரு பக்கெட்டில் வைத்தால் அதில் வடிகால் வசதிக்கு துளைகள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.இதில் செம்மண் உடன் தென்னை நார்க்கழிவு மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை சமமாக கலந்து வைக்க வேண்டும்.

பிரம்ம கமலம் செடி கிடைக்கும் இடம்:

பிரம்மகமலம்செடிநர்சரிகார்டன்மற்றும்ஆன்லைன்விற்பனையாளர்கள்மற்றும்சமூகஊடகங்களிலும்விற்பனைசெய்யபடுகின்றன. மேலும், இந்தவகைசெடிகளைஉள்ளூர்மக்கள்விற்பனைசெய்வதையும்பார்க்கலாம்.

விதைத்தல்:மாடித்தோட்டம் பிரம்ம கமலம் சாகுபடி பொறுத்தவரை செடியை மையத்தில் நடவு செய்ய வேண்டும். அகலமானதாக இருந்தால் இரண்டு செடிகள் வரை நடவு செய்யலாம்.

நீர் பாசனம்:

பிரம்ம கமலம் ஒரு சதைப்பற்றுள்ள தாவர செடியாகும். இந்த வகை செடிக்கு அதிகம் தண்ணீர் தேவைபடாது. வாரம் 3 முறை மட்டும் மண்ணின் தன்மையை பொறுத்து தாவரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடியில் தண்ணீர் தேங்க விடாமல் வடிகால் வசதி செய்யுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். பிரம்ம கமலம் செடியை சூரிய ஒளி படாமல் மறைமுகமாக வளர்க்க வேண்டும். 

உரங்கள்:

பிரம்ம கமலம் செடிக்கு மண்புழு உரம், மாட்டு சாணம் மற்றும்DAP, சமையலுக்கு பயன்படுத்தும் கழிவுகள் போன்ற உரங்களை மாதம் ஒரு முறை அளிப்பதன் மூலம் செடியின் ஆரோக்கியதிற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நோய் தாக்குதல் :

பிரம்ம கமலம் செடியில் மாவு பூச்சி,அஃபிட்ஸ் போன்றவற்றில் இருந்து செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக்கொல்லியான வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சித்தாக்குதல் ஏற்படாமல் செடியை பாதுகாக்க முடியும்.

பூக்கும் காலம்:

பிரம்ம கமலம் செடி மழைக்காலத்தில் பூக்ககூடிய தாவரமாகும். இது ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த வகை பூ ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கும் செடி இரவில் பூத்து காலையில் உதிரும் தன்மையை கொண்டுள்ளது. இந்த பூ பூக்கும்போது அதிக நறுமணத்தை கொண்டிருக்கும். பிரம்ம கமலம் மொட்டுக்கள் விரிய சுமார்  2 மற்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News