ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு .
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு, மாவரசி அம்மன் கோவில் உள்ளிட்ட பிட்டுகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 6-வது மைல் குடி நீர் தேக்கம் நிரம்பியது. அதே போல 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணை யாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மழைபெய்து வருவதால் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். குடிநீர் இந்த ஆண்டு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நகராட்சி நிர் வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0
Leave a Reply