இந்திய வீராங்கனை ஞானேஸ்வரிக்கு ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கம் .
குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 30 நாடுகளைசேர்ந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி சுற்றாக விளங்கும் 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 3-வது நாளானநேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந் திய வீராங்கனைஞானேஸ்வரி யாதவ் 'ஸ்னாட்ச்' முறையில் 88 கிலோவும், 'கிளீன் அண்ட் 3 ஜெர்க் முறையில் 106 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடை தூக்கினார். அவர் ஸ்னாட்ச்முறையில் வெள்ளிப்பதக்கமும், ஒட் டுமொத்தத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். தொடக்க நாளில் இந்திய வீராங்கனை ககன் கோகம் கோஹர் (48கிலோ) ஒரு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
சீனாவின் ஜின்லான் ஜாவ் 'ஸ்னாட்ச்' முறையில் 95 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோவும் என மொத்தம் 216 கிலோ எடை 1 தூக்கி தங்கப்பதக்கத்தைவென்றார். வியட்நாம் வீராங் கனை ஹோய்ஹூயோங்'ஸ்னாட்ச் ‘ஸ்னாட்ச் முறையில் 87கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 108 கிலோவும் எனமொத்தம் 195 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது..
0
Leave a Reply