டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி .
மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று, சிட்னியில் முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 18 ஓவரில், 133 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி 4, ரேணுகா சிங், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்திய அணி 5.1 ஓவ ரில் 50/1 ரன் எடுத்திருந்த போது,தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
'டக்வொர்த்-லீவிஸ்' முறைப்படி இந்தியாவின் வெற்றிக்கு 5.1 ஓவரில், 30 ரன் தேவைப்பட்டது. ஆனால், கூடுதலாக 21 ரன் எடுத்திருந்த எடுத்திருந்த இந்தியாவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் அருந்ததி ரெட்டி வென்றார்
0
Leave a Reply