லார்ட்ஸ் டெஸ்ட்: யஸ்திகா சதம்... இந்தியா ஆதிக்கம்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்தியா 341/7 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. யஸ்திகா பாட்யா அபாரமாக சதம் விளாச, இந்தியா மொத்தமாக 456 ரன்கள் முன்னிலை பெற்றது.
457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின்போது 47/4 ரன்கள் எடுத்து தடுமாறியது.
0
Leave a Reply