தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு .
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், மாநிலத்தின் மின் தேவை 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் நுகர்வு மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply