ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.
டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் பணிகள் நடைபெறுவதால் ,ராஜபாளையம் தென்காசி ரோடு இணைப்பு சாலை தொடக்கப்பகுதியில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து அபாயம் உள்ளது.
2025 பிப். 8ல் இணைப்பு சாலை பணிகள்ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து தென்காசி ரோட்டுக்கு ரூ.38.34 கோடியில் 2.10 கி.மீ துாரத்தில் 100 அடி அகலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கியது.
.இணைப்பு சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் நுழைவு, வெளியுறும், பகுதிகளில் சென்டர் மீடியன் பணி நடக்கிறது.டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் நடைபெறும் பணியால்வளைவில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமத்துடன் விபத்து அபாயம்ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
நுழைவு பகுதி விரிவாக்கத்தில் உள்ள சிக்கலைமாவட்ட நிர்வாகம் தலையிட்டு ,கனரக வாகனங்களின் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply