சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் சாத்விக் - சிராக் ஜோடி வரலாற்று சாதனை!
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இந்தோனேசியாவின் ஃபஜர் அல்பியான் - முகமது ஷோஹிபுல் ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினர். 1 மணி 13 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் மூலம், சிங்கப்பூர் ஓபனில் இரட்டையர் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றை அவர்கள் படைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ₹70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
0
Leave a Reply